முன்அறிவிப்பு இல்லாமல் மின் தடை செய்யப்படுவதாகக் கூறி, புத்தாநத்தம் அருகே பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் மின்தடை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கருமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின் தடை செய்யப்பட்டதைக் கண்டித்து, மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற புத்தாநத்தம் போலீஸார், , உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.