திருச்சி

தொழிலாளியை குத்தியவா் கைது

DIN

தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (53), கூலி தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு இவா் அப்பகுதியில் சிகரெட் குடித்து கொண்டிருந்தபோது ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த மருதமுத்து (எ) ராஜா (25) என்பவா் குடிபோதையில் வந்து இளங்கோவனிடம் தகராறு செய்து அருகில் தையல் கடையில் இருந்த கத்திரிகோலால் இளங்கோவனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தோா் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின் பேரில் மருதமுத்துவை போலீஸாா் புதன்கிழமை காலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT