திருச்சி

11 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (செப்.14) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வரும் சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெறும்.
திருச்சி கிழக்கு வட்டத்தில் சங்கிலியாண்டபுரம், திருச்சி மேற்கு வட்டத்தில் உய்யக்கொண்டான் திருமலை-1, திருவரங்கம் வட்டத்தில் ஆளவந்தான்நல்லூர், மணப்பாறை வட்டத்தில் சாம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் வளநாடு-2, லால்குடி வட்டத்தில் இடங்கிமங்கலம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மாதவபெருமாள்கோயில், முசிறி வட்டத்தில் வாளவந்தி, துறையூர் வட்டத்தில் எரகுடி-1, தொட்டியம் வட்டத்தில் திருச்சிபிரதானசாலை-1 திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT