திருச்சி

உறையூரில் 4 குடிசைகள் தீக்கிரை

DIN

திருச்சி உறையூரில் வியாழக்கிழமை காலை அடுத்தடுத்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 
திருச்சி உறையூர் தெற்கு வெள்ளாளத் தெருவில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக உள்ளதால் காலை வெளியே சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். கடந்த வாரம் இதே பகுதியில் வசித்து வந்த சொக்கலிங்கம் என்பவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த செல்வம்(38) வீட்டில் இருந்து புகை வெளியேறியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மற்ற வீடுகளுக்கு தீ பரவியது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் செல்வம் (38), மாரியம்மாள்(70), மகிழம்பாள் (67), லெட்சுமி (43) ஆகியோரது வீடு முற்றிலும் சேதமடைந்தது. பல ஆயிரம் மதிப்பு துணி மற்றும் மளிகை பொருள்கள் சாம்பலாகின.
இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் உறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT