திருச்சி

மாயமான கூலித் தொழிலாளி சடலமாக மீட்பு

DIN

திருச்சி அருகே மாயமான கூலித் தொழிலாளி சடலத்தை மீட்டு நவல்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருச்சி மாவட்டம், குண்டூர் பர்மா காலனி மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(53). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 
வெள்ளிக்கிழமை (செப். 6 ) வேலைக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரது மனைவி உமாமகேஸ்வரி நவல்பட்டு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் அவரது சடலம் மிதப்பதாக நவல்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT