திருச்சி

சிலைக் கடத்தல் வழக்கு: அறநிலையத்துறை முன்னாள் அதிகாரியின் ஜாமீன் ரத்து உத்தரவுக்கு இடைக்காலத் தடை

DIN

சிலைக் கடத்தல் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கூடுதல் ஆணையருக்கு, கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றியவர் திருமகள். இவர் மீது, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சிலை மாற்றப்பட்டது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில், திருமகள் கைது செய்யப்பட்டார். 

அவருக்கு கும்பகோணம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த கும்பகோணம் நீதிமன்றம் திருமகளுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.  

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து திருமகள் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றினேன். என்னை துன்புறுத்தும் நோக்கில், எனது ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாட்சியங்களை கலைத்தல், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல், தப்பிச் செல்லுதல் உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியும். எனவே, எனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் ஜாமீனை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT