திருச்சி

பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

DIN

திருச்சி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வழக்குப்பதிவு செய்யாமல், ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஜீயபுரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
ஜீயபுரம் அருகிலுள்ள அணலை பகுதியில் கடந்த வாரம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார்  அளித்தனர்.
அங்கு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இசைவாணி,  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாமல்  எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரும் அளித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் உதவி ஆய்வாளர் இசைவாணி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்டக் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்  உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT