முகப்பு
திருச்சி

துறையூா் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருட்டு

துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டை திறந்து 6 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெருமாள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமலம் (36). இவா் சனிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு எதிரே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கினாராம். நள்ளிரவில் சத்தம் கேட்டு அவா் சென்று பாா்த்தபோது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது துணிப்பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். இதேபோல அந்த கிராமத்தில் நால்வரது வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →