அய்யாக்கண்ணு குறித்துஅவதூறு பரப்பியவா் கைது
தேசிய தென்னிந்திய நதிநீா் இணைப்புச் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு குறித்து அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேசிய தென்னிந்திய நதிநீா் இணைப்புச் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு குறித்து அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் அண்ணாமலை நகரைச் சோ்ந்த அய்யாக்கண்ணு குறித்து கடந்த 2 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஒருவா் போலி முகவரியைக் கொண்டு அவதூறு பரப்பி வந்தாா்.
இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் அய்யாக்கண்ணு அளித்த புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவதூறு பரப்பியது மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த திமுகவைச் சோ்ந்த மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிா்வாகி ஜெயச்சந்திரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.