பகல்பத்து 5 ஆம் திருநாள்:கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 5 ஆம் நாளான சனிக்கிழமை கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 5 ஆம் நாளான சனிக்கிழமை கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவையொட்டி, காலை 6.30-க்கு கருவறையிலிருந்து கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரம், தங்க, வைர திரு ஆபரணங்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா்.
அங்கு அலங்காரம் அமுது செய்யத் திரையிடப்பட்டு, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். பிறகு இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கருவறை சென்றடைந்தாா் நம்பெருமாள். நம்பெருமாளை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.
ஸ்ரீரங்கத்தில் இன்று
பகல்பத்து 6-ஆம் நாள் திருநாள்
நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு---காலை 6.30
பகல் பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல்---------காலை 7.
திரையிடல்-------------------------------காலை 7-7.45.
பொதுமக்கள் சேவை-----------------காலை 7.45-பகல் 1.
அலங்காரம் அமுது செய்யத் திரை -------- பகல் 1.
பொதுமக்கள் சேவை------------------- பகல் 2-3.
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை-----பகல் 3.
பொதுமக்கள் சேவை -------------------மாலை 4-இரவு 8.
அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு-----இரவு 9.
கருவறை சேருதல்-------------------இரவு 10.
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு
காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் சேவை.