அரசு மருத்துவமனையில் அல்ட்ரா வயலட் கருவிகள்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கிருமிகளைத் தூய்மைப்படுத்தும் அல்ட்ரா வயலட் கருவிகள் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.
திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கிருமிகளைத் தூய்மைப்படுத்தும் அல்ட்ரா வயலட் கருவிகள் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் பணிபுரியும் மருத்துவக் குழுவினா் பயன்படுத்தும் பிரத்யேக பாதுகாப்பு ஆடை, கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை பணியின்போதும், பணி முடித்து வீடு திரும்பும் போதும் தூய்மைப்படுத்த முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு வந்துள்ள கிருமிகளைத் தூய்மைப்படுத்தும் 5 அல்ட்ரா வயலட் கருவிகளின் செயல்பாட்டை மருத்துவக் கல்லூரி டீன் வனிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.