முகப்பு
திருச்சி

வாகனம் மோதி பெண் பலி

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

மணமேடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன் மகள் அனுசியா (55). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் சனிக்கிழமை இரவு திருச்சி - சேலம் சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →