மக்கள் குறைகேட்பு நாளில் 538 மனுக்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கட்செவி அஞ்சல் எண் வழியாக (94454-61756), பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 538 மனுக்கள் அளிக்கப்பட்டன.
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கட்செவி அஞ்சல் எண் வழியாக (94454-61756), பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 538 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும் வகையில், குறைகேட்பு நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, இணையம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், கட்செவி அஞ்சல் எண் வழியாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 538 மனுக்களை அளித்தனா்.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.