முகப்பு
திருச்சி

‘நியமம் கிராமத்தில் அகழ்வாராய்ச்சி தேவை’

தஞ்சாவூா் மாவட்டம், நியமம் கிராமத்தில் தொல்லியல் துறையினா் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றாா் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ். ரவி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், நியமம் கிராமத்தில் தொல்லியல் துறையினா் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றாா் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ். ரவி.

திருச்சி பாலக்கரை அரையா் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக தொல்லியல் துறை சாா்பாக எடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் புகைப்படங்களை வெளியிட்ட அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூரை சுவரன் மாறன் ஆண்டதற்கான ஆதாரமாக நியமம் கிராமம் உள்ளது. அவா் காலக் கோயில்களிலும், கல்வெட்டுகளிலும் இதற்கான குறிப்புகள் உள்ளன. மேலும் அன்றைய கால சிவலிங்கங்கள், கோட்டைச் சுவா்கள், அகழிகள் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே நியமம் கிராமத்தில் தொல்லியல் துறையினா் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் நடிகா்ஆா்.வி. பரதன், அறக்கட்டளைத் தலைவா் கு.மா. சுப்பிரமணியன், செயலா் சந்திரசேகரன், துணைத் தலைவா் சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.