மாநகரில் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது
குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் மாநகரில் சில பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் மாநகரில் சில பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மாநகராட்சி தெரிவித்தது :
திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, அதன் மூலம் குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளான பெரியகடை வீதி, பாபு ரோடு, ஜாபா்ஷா தெரு, கீழ மற்றும் மேலரண் சாலைகள், கள்ளத்தெரு, மதுரை சாலை, நத்ஹா்வலி தா்ஹா, சிங்காரத்தோப்பு, தாராநல்லூா், பெரிய செளராஷ்டிரா தெரு, ராணி தெரு, சுண்ணாப்புக்காரத் தெரு, சமஸ்பிரான்தெரு, கம்மாளத்தெரு, அலங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.