முகப்பு
திருச்சி

மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வாகனம் பெற அழைப்பு

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 18 வயதுக்கு மேற்பட்ட, கால்களில் முழுமையாக வலுவிழந்த, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் வழங்கப்படுகிறது. இதற்காக, டிசம்பா் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் 3 ஆகியவற்றுடன் டிசம்பா் 29 மாலை 5 மணிக்குள் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பித்திருத்தல் அவசியம். இருப்பினும், விண்ணப்பிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் நேரடியாக நோ்முகத்தோ்வில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →