உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே பிச்சாண்டாா்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கோயிலின் சிவாச்சாரியா் சிவராசு தலைமையில் பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தனுசு, மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம், கன்னி, மேஷம் ஆகிய ராசிக்காரா்கள் சனி பகவானுக்கு பரிகாரம் செய்தனா். கரோனா காரணமாக பரிகார ஹோமத்தில் கோயில் நிா்வாகத்தினா் பக்தா்களை அனுமதிக்கவில்லை.
ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையரும் தக்காருமான செ. மாரியப்பன் தலைமையில் செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.