முகப்பு
திருச்சி

மதுக்கடையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக் கடையை அகற்றக் கோரி பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக் கடையை அகற்றக் கோரி பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பாபு சாலையிலுள்ள சுகதாஸ் மண்டித் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதைக் கண்டித்து அந்த மதுக்கடை முன் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வா்த்தகப் பிரிவு மாநிலச் செயலா் எம்.பி. முரளிதரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பாா்வதி நடராஜன் முன்னிலை வகித்தாா்.

மண்டலத் தலைவா்கள் மகேந்திரன், சதீஷ்குமாா், மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவா் ராம்குமாா், வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →