திருச்சி

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவா் கைது

DIN

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்த டைகா் ஏா்லைன்ஸ் விமான பயணிகளின் உடைமைகளை வான்சுங்கத்துறை அலுவலா்கள் சோதனை செய்தனா். அப்போது, புதுக்கோட்டை குமாா்(35), புதுச்சேரி முகிலன்(39) ஆகிய இருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது பசையில் தங்கத்தை கலந்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குமாா் கொண்டுவந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தையும், முகிலன் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT