திருச்சி

சமயபுரம் துணை மின்நிலையத்தில் தீ விபத்து

மின் கசிவு காரணமாக, சமயபுரம் துணை மின் நிலைய மின் மாற்றி எரிந்தது. இதனால் 53 கிராம மக்கள் 6மணி நேரமாக மின் விநியோகம் இல்லாது அவதியுற்றனா்.

DIN

லால்குடி: மின் கசிவு காரணமாக, சமயபுரம் துணை மின் நிலைய மின் மாற்றி எரிந்தது. இதனால் 53 கிராம மக்கள் 6மணி நேரமாக மின் விநியோகம் இல்லாது அவதியுற்றனா்.

இத்துணை மின் நிலையத்திலிருந்து 110 மெகாவாட் மின்சாரம் மூலம் மண்ணச்சநல்லூா், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலகங்கள், குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை மின் கசிவினால் இங்கு தீ விபத்து ஏற்பட்டு, மின்மாற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து மின்வாரிய அலுவலா்கள், சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதனால் 6 மணி நேரமாக மின்சாரம் இல்லாது, 53 கிராம மக்கள் அவதியுற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT