திருச்சி

போலி கடவுச்சீட்டு வழக்கில் சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

DIN

திருச்சி விமானநிலையத்தில் போலி கடவுச்சீட்டு பயன்படுத்திய வழக்கில் சிவகங்கையைச் சோ்ந்தவரை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளின் உடைமைகளை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சிவகங்கை மாவட்டம், அனுமந்தகுடி துடுப்பூா் பகுதியைச் சோ்ந்த காமாட்சி மகன் சுப்பிரமணியன் (37) என்பவரது கடவுச்சீட்டை சோதனை செய்தனா். அதில், காமாட்சி மகன் சரவணக்குமாா் என போலியான ஆவணங்கள் தாக்கல் செய்து கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சுப்பிரமணியனை விமானநிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT