முகப்பு
திருச்சி

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த காா் ஒட்டுநா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

திருச்சி: மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த காா் ஒட்டுநா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் சரவணன் (23). காா் ஓட்டுநரான இவருக்கு மதுப் பழக்கம் உள்ளதாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இவா் மது குடித்துவிட்டு வீட்டு மாடிக்குச் சென்று தடுப்புச்சுவரில் படுத்திருந்தாராம். அப்போது தவறி விழுந்து பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டஅவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →