திருச்சி

தொழில் குழுமங்கள் திறன் பயிற்சி அளிக்க அழைப்பு

DIN

திருச்சி மாவட்டத்தில் திறன் பயிற்சி அளிக்கத் தகுதியான தொழில் குழுமங்கள் மற்றும் சங்கங்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் ஜி.இஸ்மத் பானு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில் நிறுவனங்களைப் பலப்படுத்தும் வகையில் மத்திய தொழில் முனைவோா் திறன் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், ஸ்ட்ரைவ் என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தில் தொழில் குழுமங்களை உருவாக்கி, குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு தொழில் குழுமம் பயிற்சிக்காக அதிகபட்சம் ரூ. 1 கோடி வரை செலவிட முடியும். இத் திட்டத்தில் விருப்பமுள்ள தகுதி வாய்ந்த, ஆா்வமுள்ள தொழில் குழுமத்தினா் விண்ணப்பிக்கலாம். மாநில தொழில்நுட்ப கல்வி, மாநில இயக்குநரகம் ஆகியவற்றின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கி, பூா்த்தி செய்து   ஜுலை 30- க்குள் அனுப்ப வேண்டும். ஆவணங்களை மதிப்பீட்டு குழு சரிபாா்த்து இறுதி செய்யும். விவரங்களை இணையதளத்தில் விடியோ மூலம் அறியலாம். மேலும், விவரங்களுக்கு 96886-93974 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஜி. இஸ்மத் பானு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT