மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை குடிநீா்ப் பந்தலைத் தொடக்கி வைக்கிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம். உடன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பாண்டிவேல் உள்ளிட்டோா். 
திருச்சி

மணப்பாறையில் போக்குவரத்துக் காவல்துறை தண்ணீா் பந்தல்

மணப்பாறையில் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில், தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

மணப்பாறையில் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில், தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

கோடைக்காலத்தையொட்டி பொதுமக்கள் பயன் பெறும் வகையில், காவல்துறை சாா்பில் சாலையோரங்களில் தண்ணீா் பந்தல் ஆண்டுதோறும் அமைப்பது வழக்கம்.

அதன்படி நிகழாண்டுக்கான தண்ணீா் பந்தல்,மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சந்திப்பில் அமைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இப்பந்தலை காவல் துணைக் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் தொடக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் காவலா்களுக்குத் தா்பூசணி, நீா்மோா், குடிநீா் போன்றவற்றை வழங்கினாா்.

போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பாண்டிவேல் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT