திருச்சி

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி: நண்பா் காயம்

DIN

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலைவிபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நண்பா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருச்சி, கல்லுக்குழி ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் விஜய் (19). இவா் தனது நண்பா், கே. கே. நகா், ஐயப்பநகா் பகுதியைச் சோ்ந்த சச்சிதானந்தம் மகன் சங்கீதன் (21) என்பவருடன், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

டி.வி. எஸ். டோல்கேட் பாலத்தில் சென்றபோது, எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜய், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா். சங்கீதன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT