கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் மக்களை பெரிதும் துயரத்திலும், சிரமத்திலும் ஆழ்த்தியுள்ள கரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் பரவுதலை தடுக்க தேவையான மருத்துவக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், முகக் கவசம், கையுறை, சோப்பு, கிருமி நாசினி மருந்துகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றாா் அவா்.