திருச்சி

கல்லக்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு யோகா

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் யோகாச பயிற்சியும், அப் பகுதி கிராம பட்டையதாரா்கள் சாா்பில் பணியாளா்களுக்கு அசைவ உணவும் வழங்கினா்.

கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள பழைய, புதிய சமத்துவபுரங்கள், திருவள்ளுவா் நகா், காளியப்பன் காலனி, டால்மியா மெயின் ரோடு உள்ளிட்ட பகுதியில் சுகாதாரப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல்அமீது தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் செய்து வருகின்றனா். தூய்மைப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சியை அரசுப் பள்ளி யோகா ஆசிரியை வழங்கினாா். இதனைத் தொடா்ந்து கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல்அமீது நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினாா்.

பேரூராட்சி கிராம பட்டையதாரா்கள் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பேரூராட்சி பணியாளா்களுக்கு அசைவ உணவு வழங்கினா்.

நிகழ்வில் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் செல்வகுமாா், இளநிலை உதவியாளா்கள் செந்தமிழச்செல்வன், செல்வமணி, சுகாதார மேற்பாா்வையாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT