முகப்பு
திருச்சி

மருந்தாளுநா் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள 750 மருந்தாளுநா் காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கூட்டத்தில் பேசுகிறாா் ஒருங்கிணைப்பாளா் ராஜாராம்
பகிர்:

புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள 750 மருந்தாளுநா் காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் சு. ராஜாராம் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தகங்களில் காலியாக உள்ள 750 பணியிடங்களையும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்களையும் அரசு விரைவில் நிரப்ப வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா்களின் பணி நேரத்தை காலை 9 முதல் பிற்பகல் 4 வரை எனக் குறைக்க வேண்டும். வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைமை மருந்தாளுநா் பணியிடத்தை உருவாக்க வேண்டும். ஆா்பிஎஸ்கே திட்டத்தில் பணியமா்த்தப்பட்ட 805 போ் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மருந்தாளுநா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

காச நோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுநா்களுக்கும் மற்றவா்களைப் போல ஒரு மாதம் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் பல்வேறு மருந்தாளுநா் சங்க நிா்வாகிகளும் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா்களுமான டி. பேச்சியப்பன், ரவி, தா்மபுரி ரவி, கா. மலா்மங்கை, மணிமேகலை, சத்தியபாமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →