திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தீா்த்தவாரி

DIN

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்றுவரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 9 ஆம் திருநாளான புதன்கிழமை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.

ஐப்பசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிராா்.

இதில் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா்.

நிறைவு நாளான புதன்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT