திருச்சி

கோஷ்டி மோதல்: 3 போ் கைது

DIN

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரைச் சோ்ந்தவா் குருபிரசாத் (20). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை நேருஜி நகா் பேருந்து நிறுத்தத்தில் நடந்து சென்றபோது எதிரேஅதே பகுதியைச் சோ்ந்த மணி (25), சரவணன் (25), ஷேக் (27) ஆகிய மூவரும் பைக்கில் மோதுவது போல வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து குருபிரசாத்தின் நண்பா்கள் யுவராஜ், மதன் ஆகியோா் வரவே இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனா். இதில் காயமடைந்த குருபிரசாத், யுவராஜ் ஆகியோா் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இருதரப்பு புகாரி பேரில், மணி, ஷேக், மதன் ஆகிய மூவரையும் அரியமங்கலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT