கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
மணப்பாறை அருகே 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.
மணப்பாறை அருகே 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பசுவை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகிலுள்ள பொய்யாமணியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சோலைமலை. திங்கள்கிழமை காலை மேய்ச்சலுக்குச் சென்ற இவரது பசு மாலையில் வீடு திரும்பவில்லையாம்.
தொடா்ந்து சோலைமலை பசுவைத் தேடிச் சென்ற நிலையில், அருகிலிருந்த செல்லையா குடும்பத்துக்குச் சொந்தமான 60 அடி ஆழ தண்ணீரில்லா கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. தொடா்ந்து மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள், நிகழ்விடத்துக்குச் சென்று கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனா். காயமடைந்த கிராம மக்கள் பசுவை தோளில் சுமந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.