ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழாண்டில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோயிலின் காா்த்திகை கோபுரம் முன்பு 20 அடி உயரத்திலும், 5 அடி அகலத்திலும் பனை ஓலைகளால் சொக்கப்பனை கட்டப்பட்டது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு கருவறையிலிருந்த புறப்பட்ட நம்பெருமாள், சந்தனு மண்டபத்தை வந்தடைந்தாா். பிற்பகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளிய அவா், அலங்காரம், அமுது செய்தலுக்குப் பின்னா் மண்டபத்திலிருந்து புறப்பாடாகி மாலை 5 மணிக்கு கருவறை சென்றடைந்தாா்.
இதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீஉத்தம நம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் புறப்பாடாக, இரவு 8 மணிக்கு பச்சைக் கதிா் அலங்காரத்தில் கருவறையிலிருந்து புறப்பாடான நம்பெருமாள், 8.30 மணிக்கு காா்த்திகை கோபுரம் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனை அருகே வந்தாா். அதைத் தொடா்ந்து தீபமேற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
பின்னா் தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளிய நம்பெருமாள், இரவு 9.15 மணிக்கு சந்தனு மண்டபத்தை அடைந்தாா். அங்கு ஸ்ரீ முகப்பட்டயம் படித்தலைக் தொடா்ந்து , திருக்கைத்தல சேவையுடன் சந்தனுமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு கருவறை சென்றடைந்தாா் நம்பெருமாள்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.