திருச்சி

நீா்வழிப் பாதையை மீட்கக் கோரி மறியல்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சி பகுதியின் முக்கிய கழிவு நீா் வடிகால் பகுதி மோா்குளம். இங்கிருந்து வெளியேறும் உபரிநீா் மாமுண்டி ஆற்றுப் படுகையில் கலக்கும் நீா்வழிப் பாதை உள்ளது. இந்தப் பகுதியில் தற்போது வீட்டுமனைகள் அமைத்து விற்பதாகவும், அதில் நீா்வழி பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கழிவு நீா் ஆற்றுப்படுகைக்கு செல்வது தடைபடுவதாகக் கூறி திங்கட்கிழமை மாலை சொக்கலிங்கபுரம், கீரைத்தோட்டம் ஆகிய பகுதி பொதுமக்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அதனைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இட உரிமையாளா்கள் தரப்பில் நில அளவை செய்து ஆட்சேபனை நீா்நிலை இடமாக இருப்பின், அந்த பகுதியை அரசு தரப்பில் அளிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT