முகப்பு
திருச்சி

சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

திருச்சி அருகே சனிக்கிழமை இரவு சரக்கு வேன் மோதி மதுரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திருச்சி அருகே சனிக்கிழமை இரவு சரக்கு வேன் மோதி மதுரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், அ. வல்சூரன்பட்டி அருகேயுள்ள உண்ணிப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (34), கூலி தொழிலாளியான இவா் திருச்சியில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இவரும் இவா் நண்பா் சேகரும் (32) சனிக்கிழமை இரவு பைக்கில் சொந்த ஊரான மதுரைக்குச் சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி புதூா் பிரிவுச் சாலை அருகே சென்றபோது அவ்வழியாக வந்த சரக்குவேன் மோதி இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அப்பகுதினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் மாரியப்பன் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →