முகப்பு
திருச்சி

உலக பெண் குழந்தைகள் தினம்

மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு வீட்டுக்குப் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்குதல், மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு வீட்டுக்குப் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்குதல், மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பொன்மலையடிவார பகுதியில் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பொன்மலை ரயில்வே மைதானத்தில் பெண் குழந்தைகளுக்கு பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அங்கு நடவும்பட்டன.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். மக்கள் சக்தி இயக்க மாணவிகள் அணியின் ந. தரணி, ஜீ. சகானாஸ்ரீ, ஜீ. தா்ஷனா, அ. கவி பாரதி, சிவகாமி, மகேஷ்வரி, தீபிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →