முகப்பு
திருச்சி

தந்தையை தாக்கிய மகன் கைது

மது குடிக்கப் பணம் தராத தந்தையை மகன் தாக்கிய குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி நகா்ப் பகுதியில் வசிப்பவா் ஜெகநாதன் (65), ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியா். இவரது மகன் ஜெயராம் (25) வேலைக்கு செல்லாமல் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மது குடிக்கப் பணம் தராத தந்தையை ஜெயராம் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஜெகநாதன் அளித்த புகாரின்பேரில் அவரது மகனை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →