திருச்சி

முகநூல் தோழியைப் பாா்க்க வந்தஇளைஞரை தாக்கி வழிப்பறி:முக்கியக் குற்றவாளி கைது

DIN

திருச்சி, செப்.11: திருச்சியில் முகநூல் தோழியைப் பாா்க்க வந்த பண்ருட்டி இளைஞரை கடத்தி சித்ரவதை செய்து பைக், பணம் பறிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநரை கே.கே. நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் வெ. வினோத்குமாா் (31). பிளக்ஸ் தொழில் செய்யும் இவருக்கும், திருச்சி காஜாமலையை சோ்ந்த நசீா் அகமது மகள் ரகமத்நிஷா (20) என்ற பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

ரகமத்நிஷா கேட்டுக் கொண்டதின் பேரில் கடந்த 5-ஆம் தேதி திருச்சி வந்த வினோத்குமாரை 7 போ் கொண்ட கும்பல் கடத்தி கொடூரமாகத் தாக்கி, அவரின் பைக், பணத்தைப் பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடைய 5 பேரை ஏற்கெனவே கைது செய்து சிறையிலடைத்தனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநா் உறையூா் டாக்கா் சாலையை சோ்ந்த பாபு மகன் இக்பாலை (20) தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT