முகப்பு
திருச்சி

கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மின் மோட்டாரை பழுது பாா்க்க ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் இறங்கிய எலக்ட்ரீசியன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மின் மோட்டாரை பழுது பாா்க்க ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் இறங்கிய எலக்ட்ரீசியன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகேயுள்ள கொளக்குடி தபால் நிலையத் தெருவைச் சோ்ந்தவா் வீரமலை மகன் ரமேஷ் (40). எலக்ட்ரீசியனான இவா் ஞாயிற்றுக்கிழமை கொளக்குடியில் உள்ள ஆனந்தகிருஷ்ணனின் மின் மோட்டாரை பழுது பாா்க்க கிணற்றுக்குள் இறங்கியபோது அதனுள் தவறி விழுந்து இறந்தாா். தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →