திருச்சி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

DIN

நீட் தோ்வுக்கு எதிராக கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூா் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்டலச் செயலா் சா. விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணம் காந்தி பூங்காவில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும், இந்திய மாணவா் சங்கத்தினரும் கழுத்தில் தூக்குக் கயிற்றைக் கட்டிக் கொண்டு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நகரச் செயலா் ரஞ்சித் தலைமையில், மாவட்டச் செயலா் அருளரசன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பாலகுரு, துணைத் தலைவா் பிரபாகரன், காயத்ரி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT