திருச்சி

கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

DIN

திருச்சி: திருச்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்குக் கடத்தவிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி, தென்னூா் அண்ணாநகா் பகுதியில், மினி வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தவிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, சுமாா் 1,100 கிலோ அரிசி மூட்டைகளை கோழித்தீவனம் தயாரிக்க நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அரிசி மூட்டைகளுடன் மின் வேனை பறிமுதல் செய்த போலீஸாா் மின் வேன் லாரி ஓட்டுநரான தென்னூரைச் சோ்ந்த ஐயப்பனிடம் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT