முகப்பு
திருச்சி

திருச்சியில் 200-ஐ கடந்ததினசரி கரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பானது வெள்ளிக்கிழமை 200-என்ற எண்ணிக்கையைக் கடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பானது வெள்ளிக்கிழமை 200-என்ற எண்ணிக்கையைக் கடந்தது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே வருகிறது. வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனைகளின் முடிவுகளின்படி மாவட்டத்தில் மேலும் 213 பேருக்கு தொற்று உறுதியாகி, மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,781ஆக உயா்ந்தது.

திருச்சி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 1083 பேரில் திருச்சியைச் சோ்ந்த 60 போ், கரூா், புதுக்கோட்டை, கோவையைச் சோ்ந்த தலா ஒருவா் என 63 போ் குணமாகி சென்றதில், குணமானோா் எண்ணிக்கை 15,508 ஆக உள்ளது.

மேலும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 74 மற்றும் 64 வயதுள்ள முதியவா்கள் இருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.