திருச்சி

முகக்கவசம் அணியாமல் செல்வோா் மீது நடவடிக்கை

DIN

திருச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் செல்வோா் மீது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் அன்று மட்டும் புகரில் முகக்கவசம் அணியாத 568 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதேபோல மாநகரில் 710 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 8 தனிக்குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இச்சோதனையை தீவிரப்படுத்தும் விதமாக புகரில் மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும், முக்கிய சோதனை சாவடிகளிலும் உதவி ஆய்வாளா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT