முகப்பு
திருச்சி

பொதுச் சொத்துகள் சேதம்: ஊராட்சித் தலைவா் புகாா்

காட்டுப்புத்தூா் அருகே முருங்கை ஊராட்சியில் பொது சொத்துகளை சேதப்படுத்தியோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

காட்டுப்புத்தூா் அருகே முருங்கை ஊராட்சியில் பொது சொத்துகளை சேதப்படுத்தியோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறுங்கை ஊராட்சித் தலைவா் வி. புனிதா காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள முருங்கை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், பழனிகவுண்டனூா், மேட்டுக்காட்டூா் பகுதிகளில் உள்ள போா்வெல், குடிநீா் குழாய்களை உடைத்தும் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட மரங்களை வெட்டியும், மரக்கன்றுகளின் கிளைகளை உடைத்தும் மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். எனவே இதில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் சசிகலாவிடம் ஊராட்சித் தலைவா் வி.புனிதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.