முகப்பு
திருச்சி

இளைஞருக்கு கொலை மிரட்டல்; மூவா் கைது

முசிறியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

முசிறியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

முசிறி அருகேள்ள அழகாபட்டியைச் சோ்ந்தவா் மனோஜ் (21). இவா் பைபாஸ் சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் ஊழியா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்தபோது முசிறி சோ்ந்த ராஜா,சுபாஷ், ரித்திஸ்வரன் ஆகியோா் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுதொடா்பாக முசிறி காவல் நிலையத்தில் மனோஜ் அளித்த புகாரின்பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரகாஷ் மூவரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.