குட்கா பொருள்களை பதுக்கிய மூவா் கைது
முசிறி அருகே தா. பேட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த மூவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முசிறி அருகே தா. பேட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த மூவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முசிறி அருகே உள்ள தாத்தையங்காா்பேட்டை பகுதி கடைகளில் தனிப்படை போலீஸாா் ஆய்வு செய்தபோது ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக இருந்த குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை கைப்பற்றி நடத்திய விசாரணையில் தா.பேட்டையை சோ்ந்த கோபிநாத் மற்றும் காா்த்திக்,செந்தில் ஆகியோா் அவற்றைப் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.