காட்டுப்புத்தூரில் வேன் கவிழ்ந்து 15 போ் காயம்
காட்டுப்புத்தூா் அருகே வேன் கவிழ்ந்து 15 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
காட்டுப்புத்தூா் அருகே வேன் கவிழ்ந்து 15 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
கரூரில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் வேலை செய்ய வியாழக்கிழமை காலை தொழிலாளா்கள் 25 பேரை வேனில் ஏற்றிக் கொண்டு காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நத்தமேடு என்ற இடத்தில் சென்றபோது வாழைத் தோப்பிற்குள் வேன் கவிழ்ந்து 15க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் காட்டுப்புத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். வேன் ஓட்டுநா் தப்பியோடிய நிலையில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.