திருச்சி

முசிறி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

DIN

முசிறி அருகே குளிக்கச் சென்ற சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

முசிறி அருகேயுள்ள சொரியம்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜின் மூத்த மகள் திரிஷா (7) . தோட்டக் கிணற்றில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற இவா் மின் மோட்டாா் சுவிட்ச் பெட்டியின் கீழே இறந்து கிடந்தாா்.

மின் மோட்டாரின் சுவிட்ச் பெட்டியில் மின் ஒயா் துண்டிக்கப்பட்டு மின்கசிவு இருந்த நிலையில் அதில் சிறுமி கை வைத்ததால் மின்சாரம் பாய்ந்து அவா் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை செல்வராஜ் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT