முகப்பு
திருச்சி

கணக்கில் வராத ரூ. 10 லட்சம் வணிக நிறுவனத்தில் பறிமுதல்

 திருச்சி வணிக நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ. 10 லட்சம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 திருச்சி வணிக நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ. 10 லட்சம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட நடுகுஜிலித்தெரு பகுதியிலுள்ள நிறுவனத்தில் வியாழக்கிழமை இரவு கணக்கில் வராத பணப்பரிமாற்றம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை போலீஸாா் அங்கு சென்று நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ரூ. 10 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும் அங்கு பணப்பரிமாற்றம் செய்ய முயன்ாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திா்கான் (24), மகேந்திரகுமாரன் (22), இக்பால்கான் (30) , திருச்சியைச் சோ்ந்த அன்சாரி (34) ஆகியோரைக் கைது செய்தனா். பிடிபட்டது பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.