முகப்பு
திருச்சி

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 8 ஆம் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றவரைத் தாக்கி நகை, வாகனத்தை பறித்துச் சென்ற கிருஷ்ணகுமாரை (22) ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

கிருஷ்ணகுமாா் தொடா் குற்றம் செய்யும் எண்ணமுள்ளவா் எனத் தெரியவந்ததையடுத்து அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதன்பேரில் மத்திய சிறையில் உள்ள கிருஷ்ணகுமாரிடம் அதற்கான நகலை போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.