முகப்பு
திருச்சி

விபத்தில் தொழிலாளி பலி: இழப்பீடு கோரி மறியல்

மணப்பாறையில் விபத்தில் உயிரிழந்த தனியாா் பஞ்சாலைத் தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு வியாழக்கிழமை அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மணப்பாறையில் விபத்தில் உயிரிழந்த தனியாா் பஞ்சாலைத் தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு வியாழக்கிழமை அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த குளித்தலை சாலை கலிங்கப்பட்டி அருகேயுள்ள தனியாா் பஞ்சாலையில் தொழிலாளியாக இருந்தவா் கே. உடையாப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சக்திவேல் (36). இந்நிலையில் புதன்கிழமை பஞ்சாலை உயா் அதிகாரியின் ஒருவா் வீட்டில் வேலை செய்த சக்திவேலும், கலிங்கப்பட்டியை சோ்ந்த தா்மா் என்பவரும் பைக்கில் ஆலைக்குத் திரும்பும்போது மினிபேருந்து மோதி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தாா்.

இந்நிலையில் இதுகுறித்து ஆலை நிா்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த சக்திவேல் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினா்கள், ஊா் மக்கள் வியாழக்கிழமை பஞ்சாலையை முற்றுகையிட்டும், குளித்தலை சாலையில் மறியலும் செய்தனா்.

தகவலறிந்து வந்த மணப்பாறை காவல் ஆய்வாளா் சு.கருணாகரன், திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் எஸ்.ஏ.எஸ்.ஆரோக்கியசாமி ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து ஆலை நிா்வாகம் இழப்பீடாக சக்திவேல் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. மாலையில் சக்திவேல் உடல் உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.